×

பராமரிக்க ஆள் இல்லாததால் தம்பதி தற்கொலை

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நெல்லிக்கொம்பை சேர்ந்தவர்கள் வெள்ளையன் (72). இவரது மனைவி மாரியம்மாள் (65). இவர்களது மகளான ராஜாமணி (50) திருமணமாகி திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அவரது கணவருடனும், மகன் சுப்பிரமணி (46) திருமணமாகி நெல்லிக்கொம்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக சுப்பிரமணி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தனது பெற்றோரை கவனிக்க முடியவில்லை. இந்தநிலையில் தங்களை பராமரிக்க ஆளில்லாததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வெள்ளையனும், அவரது மனைவி மாரியம்மாளும் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

The post பராமரிக்க ஆள் இல்லாததால் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Villiyan ,Nellikkomb ,Karur district ,Mariammal ,Rajamani ,Chatrapatti, Dindigul district ,Subramani ,Nellikompai ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...